தவறான சிகிச்சையில் உயிரிழந்த பெண்- வீடியோ

  • 6 years ago
மருத்துவமனையில் தவறான சிகிச்சையில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரப்பரப்பு .


குமரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கூலி தொழிலாளி ஆல்பின் ஜோஸ் என்பவரின் மனைவி சபிதா காய்ச்சல் காரணமாக அனுமதிக்கபட்டார் .அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் வல்சலா பிரசாத் போட்ட ஊசியின் காரணமாக சபிதாவுக்கு ரத்த வாந்தி வந்ததை தொடர்ந்து சிறிது நேரத்தில் சபிதா உயிரிழந்தார்இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து ஆல்பின் ஜோஸ் குளச்சல் காவல் நிலையத்தில் மருத்துவர் வல்சலா பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.