காஷ்மீர் சிறுமிக்காக ஆஜராகும் பெண் வக்கீலுக்கு தொடர் மிரட்டல்

  • 6 years ago
காஷ்மீர் சிறுமி கூட்டு பாலியல் வன்முறை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஆதரவாக ஆஜராகும் பெண் வக்கீல் தீபிகா சிங் ராஜ்வாத் சக வக்கீல்களின் தொடர் மிரட்டலால் பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதியிடம் புகார் அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கதுவா என்கிற கிராமத்தில், குஜ்ஜார் நாடோடி முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி, சிலரால் கடுமையான பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Lawyer of Kashmiri Girl Parents Threatened. Deepika Singh Rajawat is appearing in occupied Kashmir High Court on behalf of parents seeking court monitored investigation into the rape and murder of their eight-year-old child.