அநாகரிகமாக அறுவறுப்பாக பேசுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜாவின் செயலைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். எச். ராஜாவிற்கு மனநல சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 128வது பிறந்தநாளையொட்டி சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன் கூறியதாவது : அம்பேத்கர் வரையறுத்த சட்டம் மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கிறது.
VCK leader Thirumavalavan criticises H.Raja's hatred comments about protestors and also said H.Raja needs psychiatric treatment.