பெண்மை...அவள் என்றும் புதுமை | Happy Women's Day- வீடியோ

  • 6 years ago
வெற்று சொற்றொடராய் வெறும் இச்சைக்கான வேளைக்காரி போன்றே பார்க்கப்பட்ட கொடுமை...... தனக்கென கனவுகள் ஆசைகள் இருந்தாலும் தாய் என்ற ஒற்றை வார்த்தையால் தன்னலம் பேன மறந்தவள்...... தன்னை ஈன்றெடுத்த தாயேயானாலும் தனக்கென ஒருவன் வந்த பின் அவனை தாய் போல் காக்க தன் தாயையும் துறந்து செல்பவள்....

இறைவன் தந்த பொக்கிஷம் அவள்... அதனால்தான் என்னவோ அந்த பொக்கிஷத்தை திறப்பதை மறந்து அதை உடைத்து அடையவே முற்படுகிறோம்.... சில நேரங்களில் அதை சிதைத்தும் விடுகின்றோம்.... சிதைப்பதனால் அதை முழுதாக அடைந்துவிட்டதாகவோ முழுமையாக அறிந்துவிட்டதாகவோ என்றுமே கருத முடியாது...

ஒன்றுமறியா உலகமறியா பிஞ்சு குழந்தையை கூட வஞ்சகமாக பார்க்கும் உங்களின் குரூர பசிக்கு எரியும் கொல்லிகளை இறையாக்கிக் கொள்ள வேண்டுமே தவிர அந்த குழந்தைகளை அல்ல......

என்னதான் முன்னேற்றங்களும் முன்னெச்சரிக்கைகளும் அதிகரித்தாலும் அவர்கள் மீதான ஆபத்தும் ஐயமும் துறத்திக்கொண்டே தான் இருக்கிறது.......

பெண் போராளியை போற்றும் நாம் தான் நம் வீட்டு பெண்ணை துட்சமாகவும் தூற்றுவோம் .

பூலான்தேவிகளை கொண்டாடும் அதே நேரத்தில் அவர்களின் வாழ்வுகளையும் கேள்விக்குறியாக்குகிறோம்

இங்கே பெண்மையும் பெண் உரிமையும் கொடுக்கப்படவேண்டியது அல்ல எடுக்கப்படவேண்டியது . உரிமை என்னும் உள்ளடக்கத்தில் அவர்களை உள்ளிழுக்க நாம் யார் ?

Category

🗞
News

Recommended