ஏதோ ஒரு கருமத்தைக் காட்டி என்னோட டைரி என்பதா.. ஒரே போடாக போடும் சேகர்ரெட்டி!- வீடியோ

  • 7 years ago
வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படும் சர்ச்சைக்குரிய டைரி தன்னுடையது அல்ல என்று தொழிலதிபர் சேகர் ரெட்டி கூறியுள்ளார். மேலும் தனக்கு டைரி எழுதும் பழக்கமே கிடையாது, தற்போது வெளியாகி இருக்கும் டைரியில் இருக்கும் கையெழுத்து யாருடையது என்றே தெரியாது என்றும் சேகர் ரெட்டி கூறியுள்ளார்.
தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீட்டில் கடந்த ஆணடு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவருடைய வீட்டில் இருந்து 178 கிலோ தங்க நகைகளும், ரூ.34 கோடி அளவிற்கு புதிய 2000 நோட்டுகள், ரூ.147 கோடிக்கு பழைய நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. வருமான வரி சோதனையின் போது சேகர் ரெட்டியினி முக்கியமான டைரி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டதாக கடந்த ஓராண்டாகவே செய்திகள் வெளியாகின.

சேகர் ரெட்டியின் அந்த டைரியில் அதிகாரிகள், அரசியல்வாதிகள், பெரும்புள்ளிகளுக்கு கொடுத்த பண விவரங்கள் உள்ளதாக சொல்லப்பட்டது. இந்நிலையில் ஆங்கில தொலைக்காட்சி ஒன்று சேகர் ரெட்டியின் டைரி பக்கங்கள் என்று சிலவற்றை வெளியிட்டுள்ளன. இதனால் சேகர் ரெட்டி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

Industrialist Sekar reddy explained that the leaked diary is not his own, and said he does not having the habit of writing diary and also added he is ready for signature comparision.

Category

🗞
News

Recommended