சீச்சீ.. இவரும் தந்தையா... மகளை நாசமாக்கிய நபருக்கு 46 ஆண்டு சிறை!- வீடியோ

  • 7 years ago
பெற்ற மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் காமுகனுக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்தது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த அரசங்குடி மேலவிளாங்குளம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் காமராஜ்,51. இவரது மனைவி பழனியம்மாள். இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்களுக்கு 2 மகன், 2 மகள்கள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கும், ஒரு மகளுக்கும் திருமணம் ஆகி விட்டது.
கடந்த 2013 ஜூலை மாதம் பழனியம்மாள் வேலைக்கு சென்று விட்டார். 4வது மகன் பள்ளிக்கு சென்று விட்டார். ஒன்பதாம் வகுப்பு படித்த 3வது மகள் தனது வீட்டில் தனியாக இருந்தார்.குடிபோதையில் இருந்த காமராஜ் மகளை மிரட்டி, பலாத்காரம் செய்தார். தொடர்ந்து இதுபோல் பல முறை சிறுமியை மிரட்டி காமராஜ் பலாத்காரம் செய்து வந்தார். இதை கண்ட அக்கம்பக்கத்தினர் சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் அளித்தனர். அப்போது சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து தாய் பழனியம்மாள் கடந்த 2014 ஆம் ஆண்டு திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காமராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி மகிளா நீதிமன்றத்தில்வழக்கு விசாரணை நடந்து வந்தது.