மு.க.ஸ்டாலினுக்கு சைதை துரைசாமி சரமாரி கேள்விகள்- வீடியோ

  • 7 years ago
அரசியல் மற்றும் பொது வாழ்க்கையில் திறந்த புத்தகமாக செயல்படும் என் மீது மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சேற்றை வீசி வருவதால் நான் அதற்கு பதில் அளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறேன். என் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடக்கவில்லை. ஆனால் சோதனை நடந்ததாக மு.க.ஸ்டாலின் பொய் பேசி வருகிறார்.

இது போன்று அவதூறாக பொய் பேச வேண்டாம் என்று ஸ்டாலினுக்கு 3 முறை எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளேன். ஆனால் அதன் பிறகும் அவர் திட்டமிட்டு களங்கம் சுமத்தி வருகிறார். நான் மேயராக 5 ஆண்டு காலம் இருந்தபோது மு.க.ஸ்டாலின் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள், குறைகளை ஆதாரப்பூர்வமாக மன்றத்தில் எடுத்துரைத்தேன். கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலினை எதிர்த்து நான் போட்டியிட்டு தோல்வி அடைந்தேன். அவரது வெற்றி செல்லாது என்று நான் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த காரணங்களால் தான் மு.க.ஸ்டாலின் என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டு நடக்காத ஒன்றை நடந்ததாக சொல்லுகிறார்.

கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும் என்கிற லட்சியத்துடன் மனிதநேய அறக்கட்டளை மூலம் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட போட்டித்தேர்வு பயிற்சிகளை நடத்தி வருகிறேன். எம்.ஜி.ஆர். எனக்கு கொடுத்த சி.ஐ.டி.நகர் வீட்டைக்கூட மனித நேய அறக்கட்டளைக்கு தானமாக வழங்கிவிட்டு அந்த அறக்கட்டளைக்கு வாடகை கொடுத்து நான் குடியிருந்து வருகிறேன்.

வேளச்சேரி பீனிக்ஸ் மாலுக்கு பின்புறம் 13 கிரவுண்டு இடத்தில் இலவச திருமணமண்டபம் கட்டி ஏழைகளுக்கு உதவி செய்து வருகிறேன். இப்படி அறம் சார்ந்த வாழ்க்கை நடத்தி வரும் என்மீது அவதூறு வீசும் மு.க.ஸ்டாலின் இதுபோன்று ஏதேனும் ஒரு சேவை செய்ததாக சுட்டிக்காட்ட முடியுமா?

AIADMK Senior leader Saidai Duraisamy slammed DMK Working President MK Stalin on Income Tax Raids.