ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் - ஸ்டாலின்- வீடியோ

  • 7 years ago
ஊழல் செய்வதில் தான் ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இரட்டைக்குழல் துப்பாக்கிகள் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த விழாவில் பேசிய முதல்வர், சென்னை மழை பாதிப்புக்கு இதற்கு முன் ஆட்சி செய்த திமுக தான் காரணம் என்று குற்றம் சாட்டினார், மேலும் ஸ்டாலின் மேயராக இருந்த சமயத்தில் சரியான முறையில் செயல்பட்டு இருந்தால் சென்னை சிறப்பாக இருந்திருக்கும் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.அத்துடன் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்றும், நானும் , துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டைக் குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டு தமிழகத்தை முன்னேற்றப் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த திமுக செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் முதல்வரும் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அமைச்சர்கள் எல்லாம் திடீர் விஞ்ஞானிகளாக மாறிவிட்டார்கள். அவர்களைக் கண்டு அறிவியல் உலகமே வியந்து கொண்டிருக்கிறது என்றார்.

Stalin Slams that EPS and OPS will act as Double Barrel Gun in Looting the people money. Also thanks for the DMK party cadres for helping people during the Rainy time.