தலைதெறிக்க தப்பி ஓடும் பாஜக பிரமுகர்கள்-வீடியோ

  • 7 years ago
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட இருக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட விரும்பாமல் பாஜக பிரமுகர்கள் பலரும் தலைதெறிக்க தப்பி ஓடுவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஓராண்டு காலமாக ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் நடைபெறாமல் உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட போது பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதியை தேர்தல் தேதி இன்று அறிவிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது,திமுகவைப் பொறுத்தவரையில் மீண்டும் உள்ளூர் வேட்பாளர் மருது கணேஷ் நிறுத்தப்படலாம். அதேபோல் அதிமுக (அம்மா) கட்சி சார்பாக தினகரன் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார்.

Sources said that BJP leader not interest to contest in RK Nagar By Poll.